புதுக்கோட்டை : பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஊழியர் மாயம் - நகை கையாடலா?

புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் அலுவலக உதவியாளராக இருந்த மாரிமுத்து, கடந்த 5 நாட்களுக்கு முன் மாயமானார்.
புதுக்கோட்டை : பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஊழியர் மாயம் - நகை கையாடலா?
x
புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் அலுவலக உதவியாளராக இருந்த மாரிமுத்து, கடந்த 5 நாட்களுக்கு முன் மாயமானார். இதனால்  நகைகள் திருடப்பட்டதாக  என்ற சந்தேகத்தின் அடிப்படையில், 2வது நாளாக நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. மேலும் வங்கியில், தாங்கள் அடகு வைத்த நகைகள் சரியாக உள்ளதா என்று பார்க்க மக்கள் குவிந்து வருவதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மாரிமுத்துவை காணவில்லை என்று அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், புதுக்கோட்டை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து மாரிமுத்துவை தேடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு மாரிமுத்துவின் கார் திருவரங்குளம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்