காவல்துறை வாகனத்தில் டிக்டாக் வீடியோ - இரு இளைஞர்களை கைது செய்த போலீசார்

சேலம் மாவட்டம், ஆத்தூரில் காவல்துறை ஆய்வாளர் வாகனத்தில் டிக்டாக் வீடியோ செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
காவல்துறை வாகனத்தில் டிக்டாக் வீடியோ - இரு இளைஞர்களை கைது செய்த போலீசார்
x
சேலம் மாவட்டம், ஆத்தூரில் காவல்துறை ஆய்வாளர் வாகனத்தில் டிக்டாக் வீடியோ செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஆத்தூர் நகர காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர், கேசவன் என்பவர், தமது ஜீப் பழுதடைந்ததால், அதனை சரி செய்ய மெக்கானிக் கடைக்கு அனுப்பியுள்ளார். அப்போது, சபரி பிரியன் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இருவரும், ஜீப்பிலிருந்து இறங்கி வருவது போல சினிமா பாடலுக்கு டிக் டாக் செய்து அதனை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அறிந்த, ஆத்தூர் போலீசார், காவல்துறை வாகனத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி, இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்