"ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு" - தலைமை செயலக பணியாளர்கள் சங்கம் முடிவு
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை வளாகத்தில் தலைமை செயலக பணியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை வளாகத்தில் தலைமை செயலக பணியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதற்கட்டமாக, நாளை, உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அவர்கள் முடிவு செய்துள்ளனர். தீர்வு காணப்படாத பட்சத்தில் வரும் திங்களன்று தலைமை செயலக வளாகத்தை சுற்றி, பதாகைகள் ஏந்தி, மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story