ஜாக்டோ ஜியோ போராட்டம் எதிரொலி : அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுடன் பேசி பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என, அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், அரசு ஊழியர்கள் ஓராண்டுக்கும் மேலாகவே தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களை தங்களது உரிமைக்காகவும், ஊதியத்திற்காகவும் வீதியில் இறங்கிப் போராடுகிற நிலைக்குத் தள்ளியிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அரசு அலுவலகங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிவோருக்கு கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல்
உள்ள சம்பள பாக்கியை உடனடியாக
அரசு வழங்குமாறு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story