50 லட்சம் பார்வையாளர்கள் வந்து சென்ற அப்துல்கலாம் நினைவிடம்

ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் உள்ள குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்திற்கு இதுவரை 50 லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் வந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 லட்சம் பார்வையாளர்கள் வந்து சென்ற அப்துல்கலாம் நினைவிடம்
x
ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் உள்ள குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்திற்கு இதுவரை 50 லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் வந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் 2017 ஆம் ஆண்டு நினைவு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இதுவரை சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நினைவு மண்டபத்தை வந்து பார்வையிட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த காலத்தில் அதிகம் பேர் வந்து பார்த்து சென்ற இடம் இது எனவும் சிறப்பிடம் பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்