வடிவேலு காமெடி பாணியில் கிணற்றை காணவில்லை என புகார்

நடிகர் வடிவேலு நடித்த படத்தில் உள்ள காட்சியை போலவே தருமபுரி அருகே கிணற்றை காணவில்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்
வடிவேலு காமெடி பாணியில் கிணற்றை காணவில்லை என புகார்
x
நடிகர் வடிவேலு நடித்த படத்தில் உள்ள காட்சியை போலவே தருமபுரி அருகே கிணற்றை காணவில்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த கிணற்றை தனிநபர் ஒருவர் போலி ஆவணங்கள் தயாரித்து ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் காரிமங்கலம் வந்த அமைச்சர் அன்பழகனை முற்றுகையிட்ட பொதுமக்கள், கிணற்றை காணவில்லை என புகார் மனு அளித்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்