கஜா புயல் : ரூ.1,146 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு

கஜா புயல் நிவாரண நிதியாக ஆயிரத்து 146 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் டெல்டா பகுதிகளுக்கு நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் தமிழகத்துக்கு ஆயிரத்து 146 கோடியே 12 லட்ச ரூபாயை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்மட்ட குழு அளித்த ஒப்புதலின் பேரில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்