பயிர்கள் கருகுகின்றன - விவசாயிகள் வேதனை...

கஜா புயலால் சாய்ந்த மின்கம்பங்கள் இன்னும் நடப்படாமல் இருப்பதால், மின்மோட்டாரை நம்பி பயிரிட்டுள்ள விவசாயிகள் பாதிப்பு.
x
கஜா புயலால் சாய்ந்த மின்கம்பங்கள் இன்னும் நடப்படாமல் இருப்பதால், மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம்  உள்ளிட்ட பகுதிகளில் மின்மோட்டாரை நம்பி ஏராளமான விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புயல் தாக்கி 40 நாட்களைக் கடந்தும், பெரும்பாலான இடங்களில் சாய்ந்த மின் கம்பங்களுக்குப் பதிலாக புதிதாக மின்கம்பங்கள் நடப்படவில்லை. இதனால், மின்மோட்டாரை நம்பி பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்