மக்களுக்கு அனுமதி இல்லை, அரசுக்கு மட்டும் அனுமதியா? அரசு மணல் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு
கும்பகோணம் அருகே திருமேற்றளிகை கிராமத்தில் அரசு பணிக்கு மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
கும்பகோணம் அருகே திருமேற்றளிகை கிராமத்தில் அரசு பணிக்கு மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை கிராம மக்கள் சிறைபிடித்தனர். ஊரின் பொது குளத்தில் மணல் எடுக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தற்போது அரசு கட்டிட பணிக்கு மணல் எடுக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணல் லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள், வருவாய் துறையினர் சமாதானம் பேசிய பின், லாரிகளை திருப்பி அனுப்பினர்.
Next Story