மத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கு: நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முன்ஜாமீன்

மத உணர்வுகளை புண்படுத்தியதாக பதிவான வழக்கில், இயக்குநர் சந்திரசேகருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கு: நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முன்ஜாமீன்
x
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் நடந்த ஒரு விழாவில் பேசிய, நடிகர் விஜயின் தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், 'திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை லஞ்சம் கொடுப்பது' என விமர்சித்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், மத உணர்வுகளை புண்படுத்தியதாக, எஸ்.ஏ.சந்திரசேகர் மீது சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், முன் ஜாமீன் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சந்திர சேகர் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சுபாதேவி, அவருக்கு  முன்ஜாமீன் வழங்கி  உத்தரவிட்டுள்ளார்.


"3 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" - போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

இதற்கிடையே, எஸ்.ஏ.சந்திர சேகருக்கு எதிராக இந்து முன்னணி சார்பாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், சந்திரசேகர் மீதான வழக்கை  விரைவாக விசாரித்து, மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு விருகம்பாக்கம் போலீசுக்கு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்