திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு - வீணை செங்கோல் வழங்கி கவுரவம்

நாகை மாவாட்டம், திருக்குவளைக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, அக்கட்சியினர் வீணை, செங்கோல் வழங்கி கவுரவித்தனர்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு - வீணை செங்கோல் வழங்கி கவுரவம்
x
நாகை மாவாட்டம், திருக்குவளைக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, அக்கட்சியினர் வீணை, செங்கோல் வழங்கி கவுரவித்தனர். திமுக தலைவரான பிறகு முதன் முறையாக ஸ்டாலின் திருக்குவளை சென்றார். கருணாநிதி இல்லத்திற்கு சென்ற ஸ்டாலின், அங்குள்ள அஞ்சுகம் அம்மாள், முத்துவேலர், முரசொலி மாறன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட ஸ்டாலினுக்கு, திருக்குவளை மக்கள் புத்தகங்களை பரிசாக வழங்கினர். முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்