TNPL 2024 - பைனலுக்கு முன்னேறியது திண்டுக்கல் அணி

x

டி.என்.பி.எல். தகுதிச்சுற்று போட்டியில் திருப்பூரை வீழ்த்திய திண்டுக்கல் அணி, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 2-வது குவாலிஃபையர் போட்டியில், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திருப்பூர் அணி 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. திண்டுக்கல் அணி சார்பில் விக்னேஷ் 3 விக்கெட்டுகளையும், சுபோத் பாதி மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து பேட் செய்த திண்டுக்கல் அணி, ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 112 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டி.என்.பி.எல். இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற திண்டுக்கல் அணி, இறுதிப்போட்டியில் கோவை அணியுடன் மோதுகிறது.


Next Story

மேலும் செய்திகள்