1 ரன்னில் த்ரில் வெற்றி - கடைசி பந்தில் திருப்பூர் கனவை பறித்த கோவை

x

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 5-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை அணி த்ரில் வெற்றியை பெற்றது..வாழப்பாடியில் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற கோவை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கோவை அணி 160 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஷாருக் கான் அதிகபட்சமாக 32 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து, தங்களது இன்னிங்ஸை ஆடிய திருப்பூர் அணியால், 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. குறிப்பாக திருப்பூர் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரில் பந்து வீசிய முகமது 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். முடிவில் 1 ரன் வித்தியாசத்தில் கோவை அணி வெற்றியடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்