கேப்டன் பொறுப்பேற்ற பின் - முதல் முறை சூரியகுமார் சொன்ன வார்த்தை

x

இந்திய அணியின் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ், நன்றியையும் நெகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த வாரங்களில் நடந்தது கனவு போல் இருப்பதாகவும், டி20 கேப்டனாக பொறுப்பேற்கும் தன் மீது அன்பையும், ஆதரவையும் வழங்கிய ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டிற்காக விளையாடுவது வார்த்தைகளில் விவரிக்க முடியாத சிறந்த உணர்வு என்றும், இந்த புதிய பொறுப்பு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுப்பதாகவும் சூர்யகுமார் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்