ஷகிப் அல் ஹசன் மக்களிடம் மன்னிப்பு கேட்டதற்கு இது தான் காரணம்!

x

வங்கதேசத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின்போது எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்ததற்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவாமி லீக் கட்சியின் எம்.பி.யாக இருந்த ஷகிப் அல் ஹசன் போராட்டத்தின்போது மவுனம் காத்தார். இதனால் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் அவர்மீது அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஷகிப் அல் ஹசன், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மக்களின் உணர்வை மதிப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்