45-ஆவது பிரம்மாண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டி - வெளியானது இந்திய வீரர்களின் பட்டியல்

x

45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய செஸ் வீரர், வீராங்கனைகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆண்கள் அணியில் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய மகளிர் பிரிவில் வைஷாலி, வந்திகா, ஹரிகா துரோணவள்ளி, தானியா சச்தேவ், திவ்டா தேஷ்முக் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். கடந்த செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கல பதக்கம் வென்ற, இந்திய கிராண்ட் மாஸ்டர் கோனேரு ஹம்பிக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்