டி-20 உலகக்கோப்பை - நியூயார்க் பறந்த விராட் கோலி

x

உலகக்கோப்பை டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி நியூயார்க் புறப்பட்டார். இந்திய அணியில் முதல் போட்டி அயர்லாந்து அணியுடன் ஜூன் ஐந்தாம் தேதி நடைபெறுகிறது. இதற்காக நியூயார்க் நகரில் இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், ஐபிஎல் தொடரை முடித்துவிட்டு குடும்பத்துடன் பொழுதை போக்கி வந்த விராட் கோலி, நேற்றிரவு மும்பையில் இருந்து நியூயார்க் புறப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்