சாதனையில் கொடி கட்டி பறக்கும் நெல்லை கல்லூரி மாணவி.. "என்னோட லட்சியமே இது தான்.."

x

தெற்காசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி, ஒலிம்பிக்கில் பதக்கம் பெற தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். வடக்கன்குளத்தைச் சேர்ந்த மரியதேவ சேகர்- கவிதா தம்பதியின் மகள் கனிஷ்டா டீனா, தனியார் கல்லூரியில் பி.டெக். படித்து வருகிறார். சென்னையில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டியில், தொடர் ஓட்ட பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று இந்தியாவிற்கு பதக்கம் வாங்கி கொடுப்பதே தனது லட்சியம் எனக் கூறி, அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்