கோப்பையை கையில் வாங்கிய அடுத்த நொடி...ரசிகர்கள் நெஞ்சில் இடியை இறக்கிய ரோகித், கோலி அறிவிப்பு

x

கோப்பையை கையில் வாங்கிய அடுத்த நொடி...ரசிகர்கள் நெஞ்சில் இடியை இறக்கிய ரோகித், கோலி அறிவிப்பு

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் நட்சத்திர வீரர் விராட் கோலியும் ஒரே நேரத்தில் அறிவித்துள்ளனர். டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று வரலாறு படைத்துள்ள நிலையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இருவரும் தெரிவித்துள்ளனர். டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் சர்வதேச டி20 பயணத்தை முடிக்க விரும்பியதாக இரு ஜாம்பவான்களும் கூறி உள்ளனர். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 4 ஆயிரத்து 231 ரன்களுடன் ரோகித் சர்மா முதல் இடத்திலும் 4 ஆயிரத்து 188 ரன்களுடன் விராட் கோலி 2ம் இடத்திலும் உள்ள நிலையில் முதலிரண்டு இடங்களில் தங்கள் டி20 கேரியரை முடித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்