MI-லிருந்து வெளியேறும் ரோகித்?.. ரூ.50 கோடி! தங்கத்தை அப்படியே தூக்க காத்திருக்கும் டீம்கள்

x

கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்ட நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதிபெறாமல் மும்பை வெளியேறியது. இதனால் ரோகித் சர்மா அணி நிர்வாகம் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் மும்பை அணியில் இருந்து வெளியேறலாம் என தகவல் பரவி வருகின்றன. இந்நிலையில் ரோகித் சர்மாவை 2025-ஆம் ஆண்டில் ஏலத்தில் எடுக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் முனைப்புடன் உள்ளதாக கூறப்படுகிறது. மும்பை அணியில் இருந்து வெளியேறும் பட்சத்தில், ஏலத்தில் ரோகித் சர்மாவை எடுக்க இரு அணிகளும் தலா 50 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்