உலக அளவில் சாதித்த தமிழன்.. ரூ.75 லட்சம் வழங்கி பெருமைப்படுத்திய CM | Mariyappan Thangavelu

x

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை, விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு நேரில் சந்தித்தார். அப்போது, ஜப்பானில் நடந்த பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் தாம் வென்ற தங்க பதக்கத்தை முதலமைச்சரிடம் காட்டினார். உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்ததை பாராட்டும் வகையில், விளையாட்டு வீரர் மாரியப்பனுக்கு 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்