போகிற போக்கில் சம்பவம் செய்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இடத்துக்கு வந்த ஆபத்து

x

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்று அசத்தியது.கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.தொடக்கத்தில் இருந்தே சீரான இடைவேளையில் ராஜஸ்தான் அணி விக்கெட்டை இழந்து வந்ததால், அதிரடியாக ரன் சேர்க்க முடியாமல் திணறியது.இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது.அதிகபட்சமாக ரியான் பராக் 48 ரன்கள் சேர்த்தார்.145 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் சாம் கரன், ஜித்தேஷ் சர்மா பொறுப்புடன் விளையாடி நம்பிக்கை அளித்தனர்.இதனால் 18.5 ஓவர்களில் பஞ்சாப் அணி இலக்கை எட்டி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேப்டன் சாம் கரன் அபாரமாக விளையாடி 41 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகனாக தேர்வானார்.ராஜஸ்தான் அணி 8 வெற்றிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும், தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்து தொடரில் தடுமாறி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்