ரிஷப் பண்ட்-க்கு தடை விதித்த பிசிசிஐ... வெளியான அதிர்ச்சி அறிவிப்பு

x

ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் விளையாட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐபிஎல் நிர்வாகம், 56வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியுடனான ஆட்டத்தில், டெல்லி அணி மூன்றாவது முறையாக தாமதமாக பந்துவீசியதாக கூறி, கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக அபராதம் விதிக்கப்படுவதால், ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை பெங்களூருவுக்கு எதிராக நடைபெறும் 62வது லீக் போட்டியில், ரிஷப் பண்ட் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்