முதல் பதக்கத்தை வெல்லுமா இந்தியா? - எகிறும் எதிர்பார்ப்பு

x

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இன்று முதல் பதக்கத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரிகர்வ் பிரிவு வில்வித்தை மகளிர் அணிகள் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, அங்கிதா பஹத், பஜன் கவுர் இணை இன்று விளையாட உள்ளது. அரையிறுதிக்கு இந்த இணை தகுதி பெற்றால் பதக்கத்திற்கான போட்டியில் விளையாட முடியும். மதியம் 3.30 மணி அளவில் மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் கலந்துகொள்ளவுள்ளார். இதனால் இவர் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்