இந்தி குறித்து அஸ்வின் சொன்ன ஒரு வார்த்தை.. பற்றிய பரபரப்பு

x

இந்தி கற்றுக்கொள்ளவில்லை என்றால் கஷ்டம் என்று சொல்லும் நிலை வர வேண்டும் என கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியது பேசுபொருளாகியுள்ளது. தனியார் செய்தி நிறுவன நேர்காணலில் பேசிய அவர், 17 வயதுக்குட்பட்டோர் தேசிய அணிக்கு சென்ற போது, அனைத்து வீரர்களும் இந்தியில் பேசியதாகவும், தான் ஆங்கிலத்தில் பேசும்போது ஐன்ஸ்டைன் மாதிரி சக வீரர்கள் பார்த்ததாகவும் நினைவு கூர்ந்தார். மேலும், இந்தி தெரியாது போடா என்பதற்கு பதிலாக, இந்தி கற்றுக்கொள்ளாவிட்டால் கஷ்டம் என்று கூறினால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்