"கிரிக்கெட் வீரர்கள்தான் பெருசா? நாங்களும் கப் அடிச்சிட்டு வந்தோம்" - விரக்தியில் பிரபல வீரர்

x

"கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும்தான் கவுரவமா? நாங்களும் கப் அடிச்சிட்டு வந்தோம்" - விரக்தியில் பிரபல வீரர்

அனைத்து விளையாட்டுகளும் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும் என பிரபல பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி வலியுறுத்தியுள்ளார். தாமஸ் கோப்பை, பேட்மிண்டனில் உலகக்கோப்பைக்கு நிகரான ஒன்று எனக் கூறியுள்ள அவர், டி20 உலகக்கோப்பையை வென்ற வீரர்களை மகாராஷ்டிர அரசு கவுரவித்துள்ளதாகவும், தாமஸ் கோப்பையை வென்றபோது அதே மாநிலத்தைச் சேர்ந்த தனக்கு எதுவும் செய்யவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் மீது தனக்கு எந்த வெறுப்பும் இல்லை எனப் பேசியுள்ள சிராக், அனைத்து விளையாட்டுகளையும் சரிசமமாக கருத வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்