இந்திய அணியை மீட்ட அஸ்வின்-ஜடேஜா இணை

x

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஜ்முல் ஷான்டோ பவுலிங் தேர்வு செய்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்களுக்கும், கில் ரன் ஏதும் எடுக்காமலும் ஹசன் மஹ்மது ஓவரில் ஆட்டமிழந்தனர். கோலியும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்த நிலையில் ஜெய்ஸ்வால்-பண்ட் இணை சற்றுநேரம் தாக்குப் பிடித்தது. பண்ட் 39 ரன்களுக்கும் ஜெய்ஸ்வால் 56 ரன்களுக்கும் கேட்ச் ஆக, கே.எல்.ராகுல் 16 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 150 ரன்களைக் கடப்பதற்குள் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.


Next Story

மேலும் செய்திகள்