தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி.. தங்கம் வென்று அசத்திய நரிக்குறவர் சமூக வீரர்

x

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் மயிலாடுதுறையைச் சேர்ந்த நரிக்குறவர் சமூக வீரர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் 4வது யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில், குத்துச்சண்டை போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தமிழ்நாடு சார்பில் மயிலாடுதுறையைச் சேர்ந்த பல்லவராயன் பேட்டை நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் வீரசிவாஜி பங்கேற்றார். இறுதிப் போட்டியில் பஞ்சாப் வீரரை எதிர்கொண்ட வீரசிவாஜி, அபாரமாக விளையாடி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். வெற்றி பெற்ற தமிழக வீரர் வீரசிவாஜிக்கு சங்கத்தின் செயலர் குர்தீப் சிங் கோப்பை வழங்கி பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்