ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - இறுதி போட்டியில் சென்னை,கோவா மோதல்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், கொல்கத்தா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - இறுதி போட்டியில் சென்னை,கோவா மோதல்
x
கொல்கத்தா - பெங்களூரு அணிகள் இடையேயான 2வது கட்ட அரையிறுதி ஆட்டம் நேற்று கொல்கத்தா யுப பாரதி கால்பந்து அரங்கத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் 5வது நிமிடத்திலேயே பெங்களூரு வீரர் ஆஷிக், கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தா அணி 3 கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தது. முதல் மற்றும் 2வது கட்ட அரையிறுதி போட்டிகளின் அடிப்படையில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. வரும் 14ம் தேதி நடைபெறும் இறுதிபோட்டியில் சென்னை - கோவா அணிகள் மோதுகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்