ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை நீக்கம் - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. ஐ.பி.எல். சூதாட்ட புகாரில் சிக்கியதை அடுத்து, அவருக்கு பி.சி.சி.ஐ. வாழ்நாள் தடையை விதித்தது.
ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை நீக்கம் - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
x
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. ஐ.பி.எல். சூதாட்ட புகாரில் சிக்கியதை அடுத்து, அவருக்கு பி.சி.சி.ஐ. வாழ்நாள் தடையை விதித்தது. வழக்கு விசாரணையிலிருந்து ஸ்ரீசாந்த் விடுவிக்கப்பட்டாலும், அவர் மீதான தடை நீக்கப்படவில்லை. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கியதுடன், அவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிப்பது குறித்து பி.சி.சி.ஐ. மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. 36  வயதான ஸ்ரீசாந்த் கடைசியாக 2011 உலகக் கோப்பை ஒருநாள் தொடரில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்