ரஞ்சி கோப்பையை வென்றது விதர்பா அணி : தொடர்ந்து 2வது முறையாக கைப்பற்றியது

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து 2வது முறையாக விதர்பா அணி கைப்பற்றியது.
ரஞ்சி கோப்பையை வென்றது விதர்பா அணி : தொடர்ந்து 2வது முறையாக கைப்பற்றியது
x
நாக்பூரில் நடைபெற்ற இறுதி போட்டியில் சவுராஷ்டிரா அணியும், விதர்பா அணியும் மோதின. முதல் இன்னிங்சில் விதர்பா அணி 312 ரன்களும், சவுராஷ்டிரா அணி 307 ரன்களும் எடுத்தது. 5 ரன்கள் முன்னிலை பெற்ற விதர்பா அணி 2வது இன்னிங்சில் 200 ரன்கள் எடுத்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கடைசி இன்னிங்சில் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி 127 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர வீரர் புஜாரா முதல் இன்னிங்சில் 1 ரன்னும், 2வது இன்னிங்சில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து 2வது முறையாக ரஞ்சி கோப்பை வென்றதை வசிம் ஜாபர், உமேஷ் யாதவ் அடங்கிய விதர்பா அணி வீரர்கள் கொண்டாடினர். 

Next Story

மேலும் செய்திகள்