விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - விறுவிறுப்பாக நடைபெறும் வேட்புமனு தாக்கல்

x

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, இதுவரை 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, உடல்நலக்குறைவால் காலமானதையடுத்து, அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் சி. அன்புமணியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. இதனிடையே, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த அனைத்து ஓய்வூதியதாரர்கள் கட்சியின் நிறுவனரும், மாநில தலைவருமான முனியப்பன் என்பவர், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்ததார். இதுவரை அங்கு 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்