விக்கிரவாண்டி தேர்தல் கடைசி நாள்.. ராமதாஸ் விட்ட பரபரப்பு ஸ்டேட்மென்ட்

x

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க வேட்பளாருக்கு வாக்களிக்க கோரி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

தமிழ்நாட்டில் ஜனநாயகத்தையும், சமூகநீதியையும் நிலைநிறுத்த விக்கிரவாண்டி மக்களுக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆளும் அரசின் சாதனைகளை சொல்ல முடியாமல், மக்களுக்கு பணத்தையும், பரிசுப்பொருட்களையும் தி.மு.க வாரி இறைப்பதாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஏன் வாக்களிக்க கூடாது என்பதற்கு 15 காரணங்களை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், திமுக தோல்வி அடைந்தால் கடந்த மூன்றாண்டுகளாக மறுக்கப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, மின்சாரக் கட்டண உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து சமூகநீதி நடவடிக்கைகளும் தானாக நடக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்