"சாதிவாரி கணக்கெடுப்பு".. `X'ல் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பதிவு

x

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டிய அன்புமணி ராமதாஸ், அதையே தானும் சொல்வதாகவும், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுமாறும் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டின் மீது கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில்,

இட ஒதுக்கீடே போனாலும் பரவாயில்லை என்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என முரண்டு பிடிப்பது யார்? என்றும் வினவியுள்ளார்.

2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வன்னியர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது யார்? என்றும் வினவியுள்ளார்.

மேற்கண்ட அனைத்து வினாக்களுக்கும் விடை தி.மு.க., மு.க.ஸ்டாலின் என்பது தான் என்றும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்