ஜல்லிக்கட்டு காளையை குழந்தை போல் தேய்த்து குளிப்பாட்டிய விஜயபாஸ்கர்.. பீட்டாவுக்கு நெத்தியடி போஸ்ட்

x

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில், எத்தனை மேல் முறையீடுகள் வந்தாலும் களத்தில் வெல்லும் நம் ஜல்லிக்கட்டு என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு ஆர்வலர் மட்டுமின்றி 4 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவரது காளைகள் அலங்காநல்லூர், பாலமேடு என உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வீரர்களை திணறடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று தனது தோட்டத்தில் ஜல்லிக்கட்டு காளையை குளிப்பாட்டும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்