பிளிறும் யானைகள்; வானில் பறக்கும் பிரமாண்டம் - பிகினிக் ஸ்பாட்டாக மாறிய தவெக மாநாட்டு இடம்- படையெடுக்கும் மக்கள்

x

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில், அக்டோபர் 27-ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு மாநாட்டின் முகப்பு தோற்றம் கோட்டையின் மதில் சுவர் வடிவிலும், நுழைவு வாயிலின் இருபுறமும் பிளிறும் யானைகள், 2 கால்கள் மற்றும் துதிக்கையை தூக்கி வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. 2 யானைகளுக்கு மேல், கட்சியின் தலைவர் விஜயின் புகைப்படம் பொருத்தப்பட உள்ளது. தொடர்ந்து மாநாட்டு பந்தல் மற்றும் தேசிய நெடுஞ்சாலை வரை, கட்சியின் கொடிகள் 30 அடி உயர கொடிக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. இதுதவிர எல்.இ.டி விளக்குகள், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்விளக்குகள் பொருத்தப்படும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் விஜய்யின் ரசிகர்கள், தொண்டர்கள் பலர் மாநாட்டுப் பணிகளை ஆர்வத்துட பார்த்துவிட்டு செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்