திமுகவுக்கு மீண்டும் மீண்டும் குடைச்சல் தரும் திருமா | VCK | DMK | thirumavalavan

x

தமிழக அரசு முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அக்டோபர் 2ஆம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெறும் நிலையில், பல்வேறு மாவட்ட நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், ஆளுங்கட்சிக்கு நெருடலை தரக்கூடிய வகையில் போராட்டங்களை நடத்தவில்லை எனவும், மக்களுக்காக போராடுவதாகவும் தெளிவுப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்