துணை முதல்வர் பதவி ஏற்ற பின் திமுக தொண்டர்களுக்கு முதல் அறிவிப்பு | Udhayanidhi

x

என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கழக உடன் பிறப்புகள் அன்போடு தவிர்க்க வேண்டும் என்று, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, உடன்பிறப்புகள், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருவதாக தமது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கட்டளையின்படி, அவரவர் பகுதியில் மக்கள் பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம் என்று, சென்னைக்கு பயணம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்