திரண்டு இருந்த தொண்டர்கள் முன்... அழுத்தமாக புஸ்ஸி ஆனந்த் சொன்ன வார்த்தை | Bussy Anand

x

சென்னை, திருவான்மியூர் சூர்யா ஹாலில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அடுத்த மாதம் நடைபெற உள்ள கட்சி மாநாட்டில், தமிழக வெற்றி கழக தொண்டர்கள் பெருந்திரளாக, குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது உரையில் குறிப்பிட்டார். நான் அழைப்பதை தளபதி விஜய் அழைப்பது போல் நினைத்து பெருந்திரளாக கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றார். சட்டத்திற்கு உட்பட்டு நடந்து, தளபதியின் பெயரை காப்பாற்றும் வகையில் ஒழுக்கத்துடன் நடந்து, வெற்றி மாநாடாக மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்