நிராகரிக்கப்பட்ட வேட்புமனு - டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய நபர்

x

திருச்சி உறையூரைச் சேர்ந்த ராஜேந்திரன் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்... இவர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக டிஜிட்டல் ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளை மாலையாக அணிந்தவாறு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடைய மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் உரிய காரணமின்றி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறி ராஜேந்திரன் திருச்சி கன்டோன்மென்ட் எம் ஜி ஆர் சிலை அருகே உள்ள உயர் மின்னழுத்த டவர் மீது ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்... காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஒருவழியாக அவர் கீழே இறங்கினார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது...


Next Story

மேலும் செய்திகள்