திருப்பதியில் திடீர் பரபரப்பு... உள்ளே இறங்கிய போலீஸ்.. தொற்றிய பதற்றம்

x

திருப்பதியில் தெலுங்கு தேச கட்சியினர் மற்றும் ஓ எஸ் ஆர் சி பி கட்சியினர் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சந்திரகிரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் மோகித் ரெட்டி வெட்புமனு தாக்கல் செய்து வெளியே வந்தார். அதன்பின்னர், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் புலிவர்த்தி நானி உள்ளே சென்றார். இதனிடையே, ஓ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தெலுங்கு தேசம் கட்சியின் கொடியை கீழே போட்டு மிதித்த‌தாக கூறப்படுகிறது. இதனால், இரு கட்சியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால், போலீசார் தடியடி நடத்தி இரு தரப்பினரையும் கலைந்து போக செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்