மோடி, அமித்ஷா பெயர்களை இழுத்துவிட்ட ரோஜா... ``தப்ப முடியாது.. நாயுடு..'' - லட்டு விவகாரத்தில் அடுத்த பரபரப்பு

x

சந்திரபாபு நாயுடு தனது சுயநல அரசியலுக்காக கடவுளையும் பயன்படுத்துவதாக, முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றம் சாட்டினார்.

தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைந்த 100 நாட்களில் கொலை, தாக்குதல் உள்ளிட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், திசைதிருப்பும் வகையில் சந்திரபாபு நாயுடு செயல்படுவதாகவும்,

தனது சுய நலனுக்காக வெங்கடேஸ்வர சுவாமியை கூட விடவில்லை என்பது வெளிப்படையாக தெரிவதாகவும் ரோஜா குறிப்பிட்டார்.

முதலமைச்சருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் தலையீடு இல்லை என்று கூறிவிட்டு, ஜெகன் மோகன் ரெட்டி மீது எதற்கு இதுபோன்ற குற்றச்சாட்டினை வைத்துள்ளீர்கள் என்றும் ரோஜா கேள்வி எழுப்பினார்.

திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் உள்ள நிலையில், அங்கு தவறு நடந்திருந்தால் அவர்கள் ஏன் மோடி, அமித்ஷாவுக்கு தகவல் கொடுக்கவில்லை என்றும் ரோஜா கேள்வி எழுப்பினார்.

லட்டில் தவறு நடக்கவில்லை... சந்திரபாபு நாயுடு தான் தவறு செய்துள்ளார் என்றும் ரோஜா குற்றம் சாட்டினார்.

சந்திரபாபு நாயுடுவுக்காக பவன் கல்யாண் செய்யும் விரதப்பூஜையால் வெங்கடேச பெருமாள் சந்திரபாபு நாயுடுவை மன்னிக்க மாட்டார் என்றும் ரோஜா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்