2 மாதமாகியும் மர்மம் விலகாத மரணம்.. திடீரென குப்பைகளை கிளறிய சிபிசிஐடி.. நெல்லையில் பரபரப்பு

x

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார், கடந்த மே மாதம் 2 ஆம் தேதி கரைசுத்துபுதூரில் அவரது வீட்டுக்கு அருகே தோட்டத்தில் மர்மமான முறையில் சடலமாக கிடைந்தார். அவரது மர்ம மரணம் தொடர்பாக போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாத சூழலில் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்த நபர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடைபெற்றது. இப்போது ஜெயக்குமார் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத சூழலே தென்படுகிறது. இந்த சூழலில் கரைசுத்துபுதூரில் ஜெயக்குமார் வீட்டருகே சிபிசிஐடி போலீஸ் திடீர் சோதனையை மேற்கொண்டுள்ளது. முப்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் கைகளில் நீண்ட கம்புகளை கொண்டு குப்பைகளை கிளரி, ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா என ஆய்வில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்