"காந்தி, அம்பேத்கர்...." வாழ்த்தோடு ஊசி இறக்கிய திருமா

x

நாடாளுமன்ற சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்த எம்.பி. திருமாவளவன், கடந்த காலங்களில் பாகுபாடோடு செயல்பட்டது போல் செயல்படாதீர்கள் என கேட்டுக்கொண்டார். சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டிருக்கும் செங்கோல் நேர்மையாக இருக்க, நீதி தவறாமையின் அடையாளம் என சுட்டிக்காட்டிய திருமாவளவன், சபாநாயகருக்கு அழகே நீதித் தவறாமைதான் என்றார். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி, அம்பேத்கர் சிலைகளை ஓரமாய் கொண்டு வைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்