வரும் 8-ம் தேதி... ராகுல் காந்தி அதிரடி முடிவு

x

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வரும் 8-ம் தேதி மணிப்பூர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். மணிப்பூரில், கடந்த ஆண்டு இரு சமூகங்களிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை என தெரிகிறது. இந்நிலையில், வரும் எட்டாம் தேதி, மணிப்பூர் செல்லும் ராகுல் காந்தி, அங்கு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உரையாடுவதோடு, அம்மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளையும் சந்தித்து பேசவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்