Van மீது ஏறி நின்று அட்டகாசம்.. மயிலாடுதுறை மாவட்டம் அதிர Horn சத்தம் -அதிரடி காட்டிய காவல் ஆய்வாளர்

x

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சாமி நாகப்ப படையாட்சியின் 115வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சமூக நீதி சத்திரியர் பேரவை சார்பில் நடைபெற்ற பேரணியில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று சாமி நாகப்ப படையாட்சியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முன்னதாக ஊர்வலமாக வந்த பேரணியில் இளைஞர்கள் சிலர் விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சுப்பிரியா வேனை நிறுத்தி இளைஞர்களை இறக்கி விட்டு எச்சரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்