அடுத்தடுத்து ஈட்டியாக இறங்கிய `ராகுல் காந்தியின் கேள்விகள்'

x

அரசியல் தளங்களில் பொய் கூறுவதன் மூலம் வரலாற்றை மாற்றி விட முடியாது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்...

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இது இந்தியாவை ஒன்று படுத்திய காங்கிரஸ் கட்சி, நாட்டு மக்களைப் பிளவுபடுத்த முயன்றவர்கள் ஆகிய இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான தேர்தல் என குறிப்பிட்ட ராகுல் காந்தி, நாட்டை துண்டாட முயன்ற சக்திகளுடன் கை கோர்த்தவர்கள் யார் என்பதற்கும், நாட்டின் விடுதலைக்காகவும் ஒற்றுமைக்காகவும் போராடியவர்கள் யார் என்பதற்கும் வரலாறு சாட்சியாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ஆங்கிலேயருடன் துணை நின்றவர்கள் மற்றும் இந்தியச் சிறைகள் காங்கிரஸ் தலைவர்களால் நிரம்பி இருந்தபோது நாட்டைப் பிளவு படுத்திய சக்திகள் உடன் இணைந்து மாநிலங்களில் ஆட்சியை செய்தது யார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்