"வன்முறையை தூண்ட வேண்டும்" - Leak-ஆனா பாஜக தலைவரின் பகீர் ஆடியோ

x

நெல்லை தெற்கு மாவட்ட பாஜக தலைவராக பொறுப்பு வகிப்பவர் தமிழ்செல்வன். இவரும் இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவராக இருக்கும் உடையார் என்பவரும் பேசிய செல்போன் ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தனது சொந்த கட்சி நிர்வாகிகளை நம்பாமல் தனது உறவினர்களை நம்பியதால் தோற்றார் எனவும், தமிழகத்தில் பாஜக வளருவதற்கு வன்முறையை தூண்ட வேண்டும் எனவும் இருவரும் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்