`ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு' - "என்கவுண்டர் தீர்வாகாது" ஜவாஹிருல்லா கடும் கண்டனம்

x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். சீர்காழியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து, நீதிமன்றம் மூலம் குற்றத்தை நிரூபிக்க வேண்டுமே தவிர, என்கவுன்டர் தீர்வாகாது என்றார். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேர்மையாக விசாரணை நடத்தப்பட்டு, உண்மை குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்