"வரும் ஆகஸ்ட் 15க்குள்..." அமைச்சர் சொன்ன அதிரடி தகவல்

x

திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு, செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் திருச்சி விமான நிலைய இரண்டாவது புதிய முனையத்தில் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் முக்கிய பிரமுகர்கள் வருகை மற்றும் புறப்பாடு செல்லும் பாதைகளை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்